இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி

மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சார்ந்த உஜாலினி என்னும் 23 வயதுப் பெண்ணொருவருக்கு ASD Secondum என்னும் சிறு இதய துவாரப் பிரச்சினை இருந்துவந்தும் அப்பெண்ணுக்குரிய சத்திரசிக்கிச்சைக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து பண உதவிபெறுவதற்குதேவையான கடிதங்களை யாழ்.போதனா வைத்க்தியசாலை இதய நிபுணர் வழங்கியிருந்தும், அப்பெண்ணின் பெற்றோரால் பணச்சிக்கல்கள்,மொழிச்சிக்கல்களால் அவ்வுதவிகளைப் பெறாது இருந்தமையை அறிந்துகொண்ட கழகம், அப்பெண்ணின் பெற்றோர் கொழும்பிலுள்ள சனாதிபதி செயலகத்துக்கு சென்று குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்குரிய போக்குவரத்து,தங்குமிடம்,உணவு உதவிகளை ஏற்பாடுசெய்து கொடுத்ததோடு, அவர்களுக்குரிய மொழிசார் உதவிகளையும் கழகத்தார் நேரடியாக நின்று ஆற்றியிருந்தனர். இதற்குரிய செலவுகளை சைவத் தொண்டர் விவேகானந்தராஜா சரவணன் ஏற்றிருந்தார்.

2015ஆம் ஆண்டு சனவரி மாதம் குறித்த பெண் பிள்ளைக்கு ASD DEVICE CLOSURE சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
கழகத்தாருக்கு உரிய பணிசார் தகவல்களை வழங்கி கழகத்தாரை ஊக்குவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இதய மருத்துவ நிபுணர் Dr.K.அருள்நிதி (Consultant Cardiologist)அவர்கட்கு கழகத்தார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.