Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • நாவலர் விழா 2022
    2022 | சமயப்பணி | ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

    நாவலர் விழா 2022

    Byilankaisaivism 2026-05-132026-05-13

    நாவலர்பெருமானின் 200ஆவது ஆண்டு உதித்த நன்னாளினைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப, நாவலர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாவலர்பெருமானைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அங்கமாக, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் ஏற்பாட்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் அடங்கலாகப் பல்வேறு சைவ அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நாவலர்பெருமான் குருபூசையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த…

    Read More நாவலர் விழா 2022Continue

  • சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்
    2022 | சமயப்பணி | சைவ நூல்கள்

    சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்

    Byilankaisaivism 2026-05-122026-05-12

    தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது.          சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ்…

    Read More சைவம் பேணுவாம் 2022-சிவகீதை நூல் அறிமுகவிழாவும் சிவநெறி அரங்கும்Continue

  • சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு
    2015 | சமயப்பணி | சிவராத்திரி | நிதியுதவி

    சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு

    Byilankaisaivism 2025-07-012026-03-21

    சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது.  நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும்.  எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும்.

    Read More சிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்புContinue

  • ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
    2021 | சமயப்பணி | வாழ்வியல்

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 –  2021ஆம் நாளன்று  மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது.

    Read More ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021Continue

  • செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்
    2021 | சமயப்பணி | சைவப்பெரியார்

    செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…

    Read More செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்Continue

  • பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவி
    2021 | சமூகப்பணி | தென்னிலங்கை | நிதியுதவி

    பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவி

    Byilankaisaivism 2025-05-222026-03-21

    களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

    Read More பாடசாலை சுவரோவியத்துக்கு கழகத்தின் நிதியுதவிContinue

  • 2020 | கட்டுரை | சமயப்பணி | சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகனார் கட்டுரைகள்

    மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரை

    Byilankaisaivism 2025-05-202026-03-21

    அருள்மிகு மாத்தளை முத்துமாரியம்மன் திருக்கோயில் பற்றி  கழகத் தலைவரால் எழுதப்பட்ட சிறப்புக்கட்டுரை, வீரகேசரிப் பத்திரிக்கையில் வெளியாகியது.

    Read More மாத்தவள் வீற்றிருக்கும் மாத்தளையென்னும் சிவபூமி – கழகத் தலைவரின் கட்டுரைContinue

  • சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022
    2022 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022

    Byilankaisaivism 2025-05-20

    கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.                              

    Read More சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022Continue

  • 2021 | சமயப்பணி

    பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021

    Byilankaisaivism 2025-05-20

    கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.      

    Read More பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021Continue

  • 2020 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020

    Byilankaisaivism 2025-05-202026-03-21

    கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது.

    Read More சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020Continue

Page navigation

1 2 3 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search