இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் 2016ம் ஆண்டு கழகத்தின் அன்னதானப்பணி

2016ம் ஆண்டு மார்ச்சு மாதம் இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின்போது, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ம் ஆண்டில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுத்தமைபோன்று, இம்முறைத் திருவிழாவிலும் அன்னதானப்பணியினைப் பொறுப்பெடுத்து நடத்தியிருந்தோம். 2014ம் ஆண்டில் பொறுப்பெடுத்தமைக்கு அடுத்ததாக, இவ்வாண்டு மீண்டும் பொறுப்பெடுக்கப்பட்டது. இதனூடாக கழகத்துக்கும் ஊர்மக்களுக்கும் இடையே உறவுப்பாலத்தினை உருவாக்குதல்-வளர்த்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய நல்ல அறிகுறிகள் இவ்வாண்டு நடைபெற்ற அன்னதானப்பணியினூடாக கழகத்தினால் உணரப்பட்டது.

   

comments