மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு


தமிழ்நாட்டில் சித்தம் சிவமயம் ஞானதான அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட சிவகீதை நூலினை இலங்கையில் அறிமுகம் செய்துவைக்கும் விழாவாகவும், சைவ விழிப்புணர்ச்சிச் சொற்பொழிவுகள் அடங்கிய சிவநெறி அரங்கு விழாவாகவும் சைவம் பேணுவோம் விழா, கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை 20 – 12 – 2022ஆம் நாளன்று இலங்கைச் சைவநெறிக் கழகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டது. சைவசமயத்திலும் கீதை என்னும் நூல் உண்டு என்பது குறித்த விழிப்புணர்வையும், ஏராளமான கீதைகள் உள்ளன என்பதனையும் சைவத்தமிழ்…
இலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு சமயக்கருத்தரங்குகளை 04-03 – 2018ம் ஆண்டு நடத்தியதுடன், அம்மாணவர்க்கு புத்தகப்பைகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது. comments
சிவராத்திரித் திருநாளில் (13-02-2018) சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது. comments
மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார். comments
தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…