மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு


தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும். 05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். comments
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments
சிவத்தமிழ்க் கலைவிழா – இலங்கை சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் முத்தமிழ் பொங்கும் சிவத்தமிழ்க் கலைவிழாவானது 05-11-2023ஆம் நாள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி வெகுசிறப்பாகச் சொய்சாப்புரம் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இக்கலைவிழாவின் பொருட்டுப் பேச்சுப்போட்டி, வினாத்தாள் தேர்வுப்போட்டி என்பவற்றுடன் கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் சித்திபெற்ற மாணவருக்குச் சிறப்புப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், அனைத்து மாணவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. …
சைவசமயத்தவரின் சமய உறைப்புநெறியைச் சீர்குலைத்தாலேயொழிய பிறிதொருவழியிலும் தமது ஏகான்மவாத சுமார்த்தமதக் கொள்கைகளைப் புகுத்தமுடியாதென்று நன்குணர்ந்து, சைவசமயத்தவரின் கற்புநெறியைச் சீர்குலைக்குமாறு சீரடிபாபா வழிபாடு புகுத்தப்பட்டுவரும் இப்பெரும் இடர்காலத்தில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் சைவசமயத்தவருக்குச் சீரடிபாபா வழிபாடென்பது கற்புநெறியைச் சீர்குலைக்கும் இறக்குமதி வணிக வழிபாடே என்பதனைக் கட்டுரைகள் வாயிலாகச் சமூக ஊடகங்களில் எழுதிவந்தபோதும், சில ஸ்மார்த்தமத ஏகாதிபத்திய அனுதாபிகளாக விளங்கும் ஆச்சாரிய அபிடேகமெடுத்த பதிதர் சீரடிபாபாவுக்கு திருக்குடமுழுக்கு சிவாக்கினி வளர்த்தல் என்பவற்றை நடத்தினர். இதனால், சைவப்பெருமக்கள்…
தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர். அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்…
இரத்தினபுரி கலத்துர தோட்ட முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் வழமைபோன்று இவ்வாண்டும் இலங்கை சைவநெறிக் கழகம் அன்னதானப் பணியினை ஏற்று நடத்தினர். comments