சிவபூசை நூல்களும் செயன்முறைக் காணொளிகளும்
சிவபூசை இருவகைப்படும். ஒன்று ஆன்மார்த்த சிவபூசை. மற்றையது பரார்த்த சிவபூசை. ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் தானே, தன்பொருட்டுச் செய்துகொள்வதாகும். பரார்த்த சிவபூசை என்பது நாட்டின் நலன்பொருட்டும் உலகத்தார் நலன்பொருட்டும் செய்யும் பூசையாகும். ஆன்மார்த்த சிவபூசை என்பது ஒவ்வொரு உயிரும் செய்துகொள்ளவேண்டியவொன்றாகும். இது இருவகைப்படும். ஒன்று சிவாகமவழி விசேடத் தீக்கைகளுடன் செய்துகொள்ளும் ஆன்மார்த்த சிவபூசை. இப்பூசை சிறப்பு ஆன்மார்த்த சிவபூசை என்று போற்றுதற்குரியது. மற்றையது, அன்புமார்க்கமாய்ச் செய்யும் சிவபூசையாகும். இது பொது ஆன்மார்த்த சிவபூசை என்று பாராட்டுக்குரியது. எறும்பு, யானை, சிலந்தி, ஈ, காகம், குரங்கு என்று சிவபெருமானை இவ்வகையிற் வழிபட்டு உய்வடைந்த சைவப்புராணச்செய்திகள் ஏராளம். இவ்வாறு, விலங்குகளே பூசைசெய்து சிவபெருமானின் அருளைப் பெற்றுய்ந்துள்ளபோது, பிறத்தற்கரிய மானிடப்பிறவியிற் அடைதற்கரிய அரும்பேறாகிய சைவசமயத்தினைச் சார்ந்த சைவமக்கள், சிவபூசையினைக் கைக்கொள்ளாவிட்டால், எடுத்த பிறப்பை வீணாக்கியதாகவே முடியும்.
சிவாகமவழிப்பூசை செய்யக்கூடிய பக்குவம் அற்றோர், அன்புமார்க்கப்பூசையேனும் (பொது ஆன்மார்த்த சிவபூசை) இல்லத்தில் செய்துவருதல் வேண்டும். சிவாகமவழிப்பூசையினைச் செய்வதற்கு சமயதீக்கையும் விசேடதீக்கையும் பெற்றிருத்தல் வேண்டும். இந்த இரண்டு தீக்கைகளும் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடியதேயாகும். சமயதீக்கை பெற்று விதிப்படி அனுட்டானம் முதலியன உடையோர்கள் விசேடதீக்கைக்கு தகுதியுடையவர்களாவர். இவ்வாறு விசேடதீக்கை பெற்றுக்கொண்டோர் செய்யும் நித்திய சிவபூசை சிவாகமவழியில் அமைந்ததாகும். இவ்வாறு, சிவாகமவழியில் அமைந்த பூசையினைச் செய்வதற்கு விதிப்படி ஒழுகும் சூழல் வாய்த்திடாதோர், அன்புமார்க்க சிவபூசையினையேனும் நித்தமும் செய்துவருதல் வேண்டும். இருவகைப்பூசைகளுக்கும் நாம் சிவபெருமான்பால் கொள்ளும் அன்பே முதன்மையெனினும், சமயநெறி வழக்கில் சிவாகமவழியில் விதிப்படி பூசிக்கும் சூழலைப் பெற்றுக்கொள்ளாதோர் செய்யும் அன்புமார்க்கச் சிவபூசை, பொது ஆன்மார்த்த சிவபூசையென்றும், அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசையென்றும் பாராட்டப்படும்.
சிவபூசை இல்லாத மனிதப்பிறப்பு வீணானதும் பாழானதுமாகும். சிவபூசையினை மிகவும் சுருக்கமாகச் செய்வது முதல் மிக விரிவாகப் பூரணமாகச் செய்வதுவரை பல படிநிலைகளைக் கொண்டு பலவகையினதாக உண்டு. ஒரு பிள்ளை நாள்தோறும் 2 மணித்தியாலம் கற்கின்றது. இன்னொரு பிள்ளை நாள்தோறும் 6 மணித்தியாலம் கற்கின்றது. அதிக மணித்தியாலம் கற்கும் பிள்ளை அதிக பலனைக் கல்வியில் அடைவதற்கு அதிக வாய்ப்புண்டு. அதேசமயம், குறைந்த மணித்தியாலங்களே கற்கும் பிள்ளை சிலசமயம் தனது நினைவாற்றலால் ஏனைய பிள்ளைகளைவிட அதிக பலனையும் அடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. நினைவாற்றல் கைகொடுக்கவில்லையென்றாலும், 2 மணித்தியாலக்கல்வி சிறிது பயனையேனும் கொடுத்தே தீரும். கல்விக்கு நேரத்தையே ஒதுக்காது வீணே கழிக்கும் ஒரு பிள்ளையினைவிட சிறிதளவேனும் நேரம் ஒதுக்கிக் கற்கும் பிள்ளை போற்றப்படவேண்டிய பிள்ளையாகும். அதுபோல், சிவாகமவழியில் பூசைகளைச் செய்யும் சூழலை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாவிட்டால், குறைந்தபட்சம் அன்புமார்க்கச் சிவபூசையேனும் நித்தியம் செய்துவருதல் வேண்டும். சிவபூசையினை நினைத்தலே பெரும்புண்ணியம் என்னும்போது, சிவபூசையினை இமைப்பொழுது நேரமேனும் செய்வது கோடிப் புண்ணியத்தை ஈட்டித்தரும்.
இல்லங்களில் செய்யக்கூடிய அன்புமார்க்க ஆன்மார்த்த சிவபூசை நூலை இலங்கை சைவநெறிக் கழகம் பதிப்பித்துள்ளது. இந்நூலைச் சைவப்பெருமக்கள் உவந்தேற்றுப் பயன்படுத்தி சைவராய்ப் பிறந்த பயனை எய்துதல் கடனாகும். எந்தவொரு கிரகதோசங்களானாலும் எந்தவொரு தடைகளானாலும் அவை எமது வினைகளால் வருவனவேயாகும். எனவே, அவற்றை அக்கிரகங்களோ அன்றி ஏவல்வழி நிற்கும் ஏனைத் தெய்வங்களோ மாற்றுவதென்பது முடியா! எனவே, வினைகளை உயிர்களின் பக்குவத்தின்பொருட்டு ஊட்டும் கடவுளினை வழிபடுவதனூடாகவே, பக்குவம் எய்தி வினைகளிலிருந்து விடுபடமுடியும். உயிர்களோடு கடந்தும் உள்ளும் விளங்கும் சிவபெருமானின் அருட்கருணையே நாம் வினையை வெல்வதற்கு ஓராவழியாகும். எந்தவொரு புராணத்திலும் எந்தவொரு இதிகாசத்திலும் கிரகங்கள் முதலியவற்றை வழிபட்டு வினைகளிலிருந்து விடுபட்டதாக வரலாறில்லை. சிவபெருமானின் ஏவலில் விளங்கும் தெய்வங்கள் யாவும் தம் வினைகளையே மாற்றமுடியாது சிவபெருமானின் ஏவல்வழி நிற்பவையேயாகும். எனவே, சிவபெருமானை வழிபடுவதே நம் வினைகளை வெல்வதற்கு நமக்கு விளங்கும் ஒரேயொரு வழியாகும்.
1) இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட சைவப்பெருமக்கள் அனைவரும் இல்லங்களில் செய்யக்கூடிய அன்புமார்க்க சிவபூசை நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
3)சிவபூசைத் திரட்டு – நாவலர்பெருமான் தமது சிவபூசைக்கென்று பயன்படுத்திய திருமுறைகளைச் சிவபூசைப் படிமுறையில் எழுதிவைத்திருந்த ஏட்டுச்சுவடியைக் கொண்டு பதிப்பிக்கப்பட்ட நூல்.
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B
DOWNLOAD 3A
DOWNLOAD 3B
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

5)தஞ்சாவூர் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் காணப்பட்ட ஏட்டுச்சுவடியின்படியான சிவபூசைப் பத்ததி நூல்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 1C
DOWNLOAD 1D
DOWNLOAD 1E
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

10) சிவபூசை செயன்முறை விளக்கம் – திரு.நா.சி.சிதம்பரம், சிவ.சித்திரசபாபதி ஆகியோர் தொகுத்து, சகுந்தலை நிலைய வெளியீடாக வந்துள்ள நூல். முதல் பதிப்பு – 2021 நவம்பர்.
DOWNLOAD
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
12) பத்தே நிமிடத்தில் பரமன் பூசை – வெளியீடு: வேதாகம அகாதமி,இலண்டன் (மிகச் சுருக்கமான சிவபூசை நூல்)
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
(இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய மின்னூல் இணையப்பரப்பில் இதுவரை கிடைக்கவில்லை.)

16) சிவபூசை முறைகளிற் சிந்தாந்த விளக்கம் (ஆன்மார்த்தம்) – சிவத்திரு.செ.ஈசான சொர்ணலிங்கம் தேசிகர் – சிவத்திருமன்றம் வெளியீடு
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
18) ஞான சிவாசாரியர் எழுதியருளிய சிவபூஜா ஸ்தவம்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 2A
DOWNLOAD 2B
DOWNLOAD 3A
DOWNLOAD 3B
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
20) ஆத்மார்த்த சிவபூஜா பத்ததி – தொகுப்பு சிவத்திரு.ச.மகாலிங்கசிவக்குருக்கள் (யாழ்ப்பாணம்)
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
21)சிவபூசை விதி சுவடி -சேகரிப்பாளர் பத்மநாபன் சர்வேஸ்வரா ஐயர் சேகரம்
DOWNLOAD 1A
DOWNLOAD 1B
DOWNLOAD 1A
DOWNLOAD 1B

DOWNLOAD 1A
DOWNLOAD 1B
24)சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவார் -சிவபூசை நூலைத் தழுவிய சிவபூசைச் செயன்முறைக் காணொளி
25)சிவத்திரு பவானி தியாகராசனார் அவர்களுடைய சிவபூசைச் செயன்முறைக் காணொளி
26)கூனம்பட்டி ஆதீன சிவபூசைச் செயன்முறைக் காணொளி
27)தருமையாதீன மரபில் அமைந்த சிவபூசைச் செயன்முறைக் காணொளி
28)தருமையாதீன மரபில் அமைந்த சிவபூசை விளக்கப் பாடம்
29)சிவ ஜானகிராமனார் சிவபூசைச் செயன்முறைக் காணொளி
30)சிவ.இரா.ரமேஷ்குமாரனார் சிவபூசை விளக்கவுரை
குறிப்பு :-1இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள நூல்கள் இணையப்பரப்பில் சேகரிக்கப்பட்டதாகும். பயன்படுத்தும் வகையில் பதிப்புரிமை இடர்களைத் தவிர்த்துள்ள அமைப்புக்களின் நூல்கள் இணையத்தில் ஏற்றப்பட்டும் இப்பதிவு அமைக்கப்பட்டுள்ளது. இப்பதிவு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வலைப்பூவிலும் பேணப்பட்டுள்ளது. வலைப்பூ முகவரியில் இடுக்கியை அழுத்திச் சென்று காணலாம். –சிவபூசை – நூல்களும் காணொளிகளும்.
குறிப்பு-2 :- சைவப்பெருஞ்சமயமே இலங்கை சைவநெறிக் கழகத்தால் நோக்கப்படுவதால், பல்வேறு மரபுகளிலும் விளங்கும் சிவபரத்துவப்பூசை முறைகள் தொகுக்கப்பட்டுள்ளது.