Similar Posts
தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்
சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள் குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை…
இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018
2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…
மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது. comments
களுத்துறை மண்ணில் நவராத்திரி விழா விவாத அரங்கு 2023
களுத்துறை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குரிய நவராத்திரி விழாவுக்குரிய விவாத நிகழ்ச்சிக்குரிய பயிற்சி இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டதுடன், இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் 20 – 10 – 2023ஆம் நடைபெற்ற குறித்த விவாத நிகழ்ச்சி நடுவர் பொறுப்பில் இருந்து நெறிப்படுத்தப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிக்கு , இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சைவத்திரு.ய.அநிருத்தனன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின்…
இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017
2017ம் ஆண்டு மார்ச்சு மாதம் 18ம் நாள் இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டுபோன்று, இவ்வாண்டும் அன்னதானப்பணியினை ஆலயத்தின் திருவிழாவின்போது இலங்கை சைவநெறிக் கழகம்(சைவசமூகத் திருப்பணிக் கழகம்) பொறுப்பெடுத்து செவ்வனே நிறைவேற்றியது. ஊர்மக்களுடன் நெருங்கிய பந்தம் இந்த அன்னதானத்தின் பலனாக உருவாகி, சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை. comments

