Similar Posts
இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை. comments
புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017
புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார். comments
இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments
இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணி
இரத்தினபுரி கலத்துர தோட்ட முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் வழமைபோன்று இவ்வாண்டும் இலங்கை சைவநெறிக் கழகம் அன்னதானப் பணியினை ஏற்று நடத்தினர். comments
கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி
நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. comments

