வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்

டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழையானது, 22ஆம் திகதி முதல்  கொடும் மழையாகப் பெய்யத்தொடங்கியதனால் இலங்கையின் வடபகுதி பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் தஞ்சமடைய வேண்டிய இடர் ஏற்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், வவுனியா,முல்லைத்தீவு ஆகிய தமிழ்ப் பகுதிகளே இவ்வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களாகும்.


இவ்வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட இடர்காலத்தில், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, வடபகுதியில் நேரடியாகப் பயணஞ் செய்து வழங்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

எனவே, இலங்கை சைவநெறிக் கழகத்தால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடு இணைந்து, பொருட்கள் பலவும் கொள்வனவு செய்யப்பட்டு, அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சரசுவதி ம்ண்டபத் தற்காலிக களஞ்சிய சாலையில் (இந்து வித்தியா  விருத்திச் சங்கத்தினுடையது) 26- 12 – 2018ஆம் நாள் கையளிக்கப்பட்டது.


2018 வெள்ளப்பெருக்கின் பாரதூரத்தினை அறிந்து கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்
1) FloodList என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இணைய முகவரி
https://floodlist.com/asia/sri-lanka-floods-december-20182) THE FLOOD PEOPLE என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் இணைய முகவரி
https://www.jbarisk.com/knowledge-hub/event-response/flooding-in-sri-lanka-2018/

3) World Food Programme என்னும் பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை
https://www.wfp.org/publications/2018-sri-lanka-report-flood-impact-north-east-monsoon

4) OCHA (United Nations Office for the Coordination of Humanitarian Affairs) – reliefweb  ஆய்வறிக்கை
https://reliefweb.int/disaster/fl-2018-000425-lka

comments