மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு


களுத்துறை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குரிய நவராத்திரி விழாவுக்குரிய விவாத நிகழ்ச்சிக்குரிய பயிற்சி இலங்கைச் சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டதுடன், இலங்கைச் சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசானதேசிகர் மரு.கி.பிரதாபன் அவர்களால் 20 – 10 – 2023ஆம் நடைபெற்ற குறித்த விவாத நிகழ்ச்சி நடுவர் பொறுப்பில் இருந்து நெறிப்படுத்தப்பட்டது. திருக்கோயில் நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் கலைநிகழ்ச்சிக்கு , இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சைவத்திரு.ய.அநிருத்தனன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின்…
கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…
26 – 06 – 2020ஆம் நாளன்று மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறி கழகத்தினால், ஹேகிட்டிய வத்தளை முருகன் திருக்கோயிலில் மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையினையும் திருவாசக முற்றோதலும் ஒழுங்கமைக்கப்பட்டது. இந்நிகழ்வினை சமயப்பிரிவுக்குப் பொறுப்பான இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் திருமதி உதயகௌரி அவர்களின் நெறிப்படுத்தலில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டது. . comments
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments
அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு…