Similar Posts
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை. comments
சிவராத்திரிப் பெருநாள் சைவ விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரம் 2020
கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது. comments
இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் 2016ம் ஆண்டு கழகத்தின் அன்னதானப்பணி
2016ம் ஆண்டு மார்ச்சு மாதம் இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின்போது, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ம் ஆண்டில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுத்தமைபோன்று, இம்முறைத் திருவிழாவிலும் அன்னதானப்பணியினைப் பொறுப்பெடுத்து நடத்தியிருந்தோம். 2014ம் ஆண்டில் பொறுப்பெடுத்தமைக்கு அடுத்ததாக, இவ்வாண்டு மீண்டும் பொறுப்பெடுக்கப்பட்டது. இதனூடாக கழகத்துக்கும் ஊர்மக்களுக்கும் இடையே உறவுப்பாலத்தினை உருவாக்குதல்-வளர்த்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய நல்ல அறிகுறிகள் இவ்வாண்டு நடைபெற்ற அன்னதானப்பணியினூடாக கழகத்தினால் உணரப்பட்டது. comments
மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு
மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம் சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020) இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில், சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால்…
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015
கழகத்தின் உறுப்பினர்களான சைவத்திரு. கோபால் இளையராஜா, சைவத்திரு.சி.விநோதரூபன், சைவத்திரு.இரா.இராஜ்குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் பல்லாண்டு காலங்களாக அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) பங்களிப்புடன் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டும் 30 ஜூலை 2015ஆம் நாள் கழகத்தின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி
நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. comments



