Similar Posts
கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் 2018
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், இலங்கை சைவநெறிக் கழகம் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 31 -07- 2018ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments
இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments
இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018
2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…
கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்
தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, தென்னிலங்கை மலையத்தமிழ் மாணவரின் கல்வி வளர்ச்சிக்குரிய பணிகளில் பங்கேற்றுக்கொண்டது. comments
இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்கு
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது. comments

