சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுரப் பணி 2022
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு (01-03-2022) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் திருக்கோயிலில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் சிவராத்திரிப்பெருநாளை (21-02-2020) முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்டது.
சிவராத்திரித் திருநாளில் 07-03-2016 ஆம் நாள் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணியகத்தில் மாமன்ற விடுதி மாணவரிடத்தே சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு கழகத் தலைவர் சைவத்திரு.கி.பிரதாபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கேள்வி பதில்களாகச் சைவசமய விழுமியங்கள் மாணவரிடம் பரிமாறப்பட்டது.சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், மாமன்றப் பொதுச்செயலாளர் திரு.தில்லை நடராசா அவர்களும், மாமன்ற உபதலைவர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களும் தலைமை வகித்தனர்.
வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.