| |

அலகிலா ஆடல்,சிவப்பிரகாசக் கதவம் – கொழும்பில் நடைபெற்ற வெளியீட்டு விழா

கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் எழுதிய அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூலும், சித்தாந்தரத்தினம் திரு.ந.சிவபாலகணேசன் அவர்கள் எழுதிய சிவப்பிரகாசக்கதவம் நூலும் இலங்கை சைவநெறிக் கழகத்தால் 20- 10 – 2018ம் ஆண்டு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
 

இவ்வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக பேராசிரியர் சி.பத்மநாபன் அவர்களும், திருவருள்மிகு விருந்தினர்களாக சிவத்திரு.கு.வை.க.வைத்தீஸ்வரக்குருக்கள், சிவத்திரு.சு.சிவராமக் கிருஷ்ணக்குருக்கள்,சித்தாந்தச்செம்மல் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் முதலியோரும்,

பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் திரு.மா.தவயோகராஜா,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.வே.கந்தசாமி,அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொருளாளர் திருமதி அபிராமி கயிலாசப்பிள்ளை அம்மையார், திரு.மா.கோ.காண்டீபன் (கணக்காளர் – இந்து சமய கலாச்சாரத் திணைக்களம்), இந்து சமயக் கலாச்சாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.இ.கர்ஜீன், சித்தாந்தச் செம்மணி திரு.செல்.நவநீதகுமார்,திருமுறைச்செல்வர் திரு.கந்தையா ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,

மாண்புறு விருந்தினராகக் கழகத்தின் இரு காப்பாளரில் ஒருவராகிய சிவத்திரு.க.இரகுநாதன் (அறக்காவலர் -கதிர்வேலாயுதசுவாமி தேவஸ்தானம் – கொழும்பு 13) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மற்றைய காப்பாளராகிய விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் கலந்துகொள்ளமுடியாமற் போயிற்று.

சிவப்பிரகாசக் கதவத்தின் நூல் அறிமுகவுரையைத் சிவத்திரு.தர்சகன் ஐயரும், நூல் நயவுரையை சித்தாந்தரத்தினம் மரு.ச.கார்த்திகைக்குமரன் அவர்களும் பலரும் பாராட்டுமாறு திறம்பட ஆற்றினர். அலகிலா ஆடல்- சைவத்தின் கதையின் நூல் அறிமுகவுரையை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் தலைவர் கலாநிதி. திருமதி.சாந்தி கேசவன் அம்மையாரும் நூல் நயவுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்து நாகரீகத்துறையின் விரிவுரையாளர் சைவப்புலவர்.திரு.சி.இரமணராஜா அவர்களும் அவையோர் பாராட்டுமாறு திறம்பட ஆற்றினர். நூல் ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்கினர்.

அச்சுவேலி சிவத்திரு.குமாரசுவாமிக் குருக்களின் நினைவாக, சைவாகம நூலொன்றுக்கு விருதுவழங்கவேண்டுமென்று கருதி, சிவபூசைமுறைகளிற் சித்தாந்த விளக்கம் (ஆன்மார்த்தம்) என்னும் நூலுக்கு “சிவத்திரு.அச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் நூல் விருது” வழங்கப்பட்டது. இவ்விருதினை  சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் , நூலாசிரியர் சிவத்திரு.ஈசான சொர்ணலிங்க தேசிகர் பெருமகனாருக்கு வழங்கிச் சிறப்புச்செய்தார்.

நூல் வெளியீட்டு விழா குறித்த விளம்பரம் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் அரங்கம் சஞ்சிகையினர் (18- 10 – 2018) இலவசமாக வெளியிட்டுச் சிறப்பித்திருந்தனர்.

comments

Similar Posts

  • |

    சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை

    கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் கழகத்தாரால் 10-10-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு மாணவரிடம் சைவசமயத் தெளிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் கல்லூரி அதிபரின் அனுமதியைப் பெற்று, வகுப்புத் தோறும் சைவசமய ஐயம் தெளிதல் வகுப்புக்களை சிறப்புற நடத்தியிருந்தனர். எமது சமயத்தின் பெயர் சைவசமயம் என்று உணர்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும்,…

  • | |

    சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனம்

    நல்லை ஆதீன இரண்டாம் குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தப் பரமாச்சாரிய சுவாமிகளுடைய திருவருள் ஆணைக்கு அமைவாக, 2018ம் ஆண்டு நடைபெற்ற (07 – 04 – 2018) சைவம் போற்றுதும் விழாவில், இலங்கை சைவநெறிக் கழகத்தால் சிவபூமிச் சைவமுதலிகள், சிவபூமிச் சைவத்தேசிகர், சிவபூமிச் சைவத் தாதையர் பிரகடனம்  அரங்கேற்றப்பட்டது. சிவபூமிச் சைவமுதலிகளாக 1)ஶ்ரீலஶ்ரீ ஞானப்பிரகாசசுவாமிகள், 2)ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானார், 3)ஶ்ரீலஶ்ரீ காசிவாசி செந்திநாத ஐயர் பெருமானார், 4)ஶ்ரீலஶ்ரீ மாயவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமானார் ஆகியோரும், சைவத்தேசிகர்களாக 1)சைவப்பெரியார் திருவிளங்கம் தேசிகர் பெருமானார்,…

  • | |

    நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

    தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…

  • | | |

    மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா

    அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு…

  • |

    தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு

    தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments

  • பத்திரிக்கைகளில் சைவம் போற்றுதும் 2018

    ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். comments