அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை


நவராத்திரியின்பொருட்டு மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. comments
சிவராத்திரித் திருநாளில் (13-02-2018) சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் அடியாரிடத்தே விநியோகிக்கப்பட்டது. comments
பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள் நாவலர் விழாவினை நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.
இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர். இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….
இலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு சமயக்கருத்தரங்குகளை 04-03 – 2018ம் ஆண்டு நடத்தியதுடன், அம்மாணவர்க்கு புத்தகப்பைகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.
சித்திரை- ஆனி 2019 தென்றல் சஞ்சிகையில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் வெளியிடப்பட்ட, இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளரால் எழுதப்பட்ட ”அலகிலா ஆடல்-சைவத்தின் கதை” நூல் அறிமுகம் வெளியிடப்பட்டிருந்தது. அலகிலா ஆடல் சைவத்தின் கதை நூலினையும் சிவப்பிரகாசக் கதவம் நூலினையும் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும். comments