இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019

இரத்தினபுரி மாவட்டத்தில் கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுதோறுமான திருவிழாவில் அன்னதானப்பணியை வழமைபோன்று இவ்வாண்டும் (23-03-2019) இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தியது.
பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன்,பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா , பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இப்பணி ஆண்டுதோறும் சிறப்புற நடைபெற்று வருவதுடன், அங்குள்ள மக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகம் இரண்டறக் கலந்துறவாட இது அருமையான வாய்ப்பாக அமைந்துவருதல் சிறப்பம்சமாகும்.