Similar Posts
தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்
சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள் குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை…
சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் 2017
சிவராத்திரித் திருநாளில் (24-02-2017 )சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் கொழும்பிலுள்ள சைவாலயங்களில் கழகத்தாரால் விநியோகிக்கப்பட்டது. comments
இலங்கை சைவநெறிக் கழகத்தின் கோவிட்கால உதவி
இலங்கை சைவநெறிக் கழகத்தினால் கோவிட் காலப்பகுதியில் புத்தளம் கல்பிட்டி பெரியபள்ளிவாசல்துறையினைச் சேர்ந்த ஐயனார் கோயில் நிர்வாகத்தினூடாக நிதியுதவி அளித்து, வாழ்வாதார உணவுப் பொதி கிராமமக்களுக்கு வழங்கப்பட்டது. மலையகத்தில் தெனியாயப் பிரதேசத்தில் தெனியாய சைவ முன்னேற்றக் கழகத்தினூடாக நிதியுதவி அளித்து, அத்தியாவசிய உணவுப்பொதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகமும் பங்கேற்றது. comments
நாவலர் காலமாற்றத்தை உள்வாங்காதவரா? கம்பவாரிதியாரின் கட்டுரைக்கு மறுப்பு
வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர். சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக…
கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்
தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, தென்னிலங்கை மலையத்தமிழ் மாணவரின் கல்வி வளர்ச்சிக்குரிய பணிகளில் பங்கேற்றுக்கொண்டது. comments
மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்
அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது. comments


.jpg)
.jpg)
.jpg)
.jpg)

