இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017

2017ம் ஆண்டு மார்ச்சு மாதம் 18ம் நாள் இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டுபோன்று, இவ்வாண்டும் அன்னதானப்பணியினை ஆலயத்தின் திருவிழாவின்போது இலங்கை சைவநெறிக் கழகம்(சைவசமூகத் திருப்பணிக் கழகம்) பொறுப்பெடுத்து செவ்வனே நிறைவேற்றியது.

ஊர்மக்களுடன் நெருங்கிய பந்தம் இந்த அன்னதானத்தின் பலனாக உருவாகி, சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.