Similar Posts
2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது. comments
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்துகொண்டு, 27 – 11 – 2021ஆம் நாளன்று மிகச்சிறப்பாக நடத்தத் திருவருள் கூடியிருந்தது. கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர் நிகழ்ச்சிகளோடு; சிறப்பு உரையாகக் கனடா சைவசித்தாந்த பீடத்தின் நிறுவுனர் சிவத்திரு.இராமநாதன் இலம்போதரன் அவர்களுடைய உரை அமையப்பெற்றது. comments
யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழா
2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி) comments
சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் 2019
2019ஆம் ஆண்டுச் சிவராத்திரித் திருநாளில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் கோயிலில் திரு.அ.கஜந்தன் அவர்களின் தலைமையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. comments
2015 | சமயப்பணி | சிவராத்திரி | நிதியுதவிசிவராத்திரி நந்திக்கொடி நிதிசேகரிப்பு
சிவராத்திரிப் பெருநாளில் உலக சைவப் பேரவை இலங்கைக் கிளையினால் நடத்தப்படும் நந்திக்கொடி நிதிசேகரிப்புக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் நிதிசேகரிப்பில் இணைந்து பங்காற்றியது. நந்திக்கொடிச் சின்னம் வழங்கி உண்டியல்களில் நிதிசேகரித்து அந்த நிதியைக் கொண்டு உலக சைவப் பேரவை இலங்கைக் கிளை இலங்கை முழுதும் பல்வேறு சைவப்பணிகளை முன்னெடுத்துவரும் அமைப்பாகும். எனவே, இப்பெருஞ் சிவப்பணிக்கு இலங்கை சைவநெறிக் கழகமும் உதவக்கூடியதாக அமைந்தது பெரும்பேறாகும். comments
கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும்
கொழும்பு இந்துக் கல்லூரி கற்பக விநாயகர் திருக்கோயிலில் 18 – 11 – 2021ம் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள் திருவிழா, இலங்கை சைவநெறிக் கழகத்தின் நிதி அனுசரணையுடன் சிறப்புற நடைபெற்றது. அத்தோடு வில்வமரம், விளா வேம்பு முதலிய மரங்களும் பாடசாலைச் சூழலில் வளர்க்கும் முகமாக, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் முதலாவது மரநடுகைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. comments

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



