| | |

மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழா

அண்மையில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீட்டில் வெளிவந்திருந்த, ஆய்வாளர் வி.துலாஞ்சனன் அவர்களின் “அலகிலா ஆடல் – சைவத்தின் கதை” மற்றும் திருமுறைச்செல்வர் ந. சிவபாலகணேசன் அவர்களின் “சிவப்பிரகாச கதவம்” ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 29-12-2018 அன்று
மட்டக்களப்பு பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமாகிய திரு.மா. உதயகுமார் பிரதம விருந்தினரான கலந்து கொண்ட இந்நிகழ்வில் அருள்விருந்தினராக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோவில் குருக்கள் சிவஸ்ரீ.வ.சோதிலிங்க குருக்கள் அவர்களும், சிறப்பு விருந்தினர்களான கிழக்கு பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களும், கிழக்குபல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை தலைவர் கலாநிதி சாந்தி கேசவன் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு, பீடுடை விருந்தினர்களாக அகில இலங்கை இந்து மாமன்ற பிரதித்தலைவர் விடைக்கொடிச் செல்வர் திரு.சி.தனபாலா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இலங்கை சைவநெறிக் கழக தலைவர் மருத்துவர் கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமான இந்நிகழ்வில் அறிமுகவுரையை மூத்த ஊடகவியலாளரும், அரங்கம் பத்திரிகை பிரதம ஆசிரியருமான பூ.சீவகன் நிகழ்த்த நுாலின் முதற் பிரதியை வைத்தி நிபுணர் கே.ரீ.சுந்தரேசன் அவர்கள் பெற்றுக்கொண்டதோடு ‘அலகிலா ஆடல் : சைவத்தின் கதை’ நூல் நயவுரையை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களும் ‘சிவப்பிரகாசக் கதவம்’ நுால் நயவுரையை சைவப்புலவர் திருமதி. சிவானந்தஜோதி ஞானசூரியம். அவர்களும் நிகழ்த்தினர். இறுதியில் நூலாசிரியர் வி.துலாஞ்சனனின் ஏற்புரையுடனும், கழகத்தின் உபதலைவர் திரு.கோபால் இளையராஜாவின் நன்றியுரையுடனும் விழா இனிதே நிறைவுற்றது.



comments

Similar Posts

  • |

    காலிமாநகர்ச் சிவன்கோயிலில் சிவராத்திரிச் சொற்பொழிவு

    தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும்.  05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். comments

  • | | |

    திருமந்திர ஆன்மீக மாநாடு 2023

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறையினரும் அகில இலங்கை சைவ மகாசபையினரும் இணைந்து திருமந்திர ஆன்மீக மாநாடு 2023 என்னும் தலைப்பில், 28 -10- 2023ஆம் நாளன்று திருமந்திர மாநாடு மிகச்சிறப்பாக நடத்தியிருந்தனர். இம்மாநாட்டில் இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் பதில் தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் மெய்கண்டார் சைவசமய அறநெறிப் பாடசாலையின் அதிபர் சைவத்திருமதி சிவசோபனா வினோதரூபன் அவர்களும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன்,  கழகத் தலைவரின் சிற்றுரையும் இடம்…

  • | | |

    2018ஆம் ஆண்டு சைவம் போற்றுதும் விழாவில் சைவம் போற்றுதும் நூல் வெளியீடு

    சைவநெறிக் கற்போடு தத்துவத்தையும் பண்பாட்டையும் இலக்கியத்தோடு இணைத்திடும் திருவிழாவாக, முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட “சைவம் போற்றுதும்” விழாவின்போது (04 – 07 – 2018) விழாவினைச் சிறப்பிக்குமாறு, “சைவம் போற்றுதும்” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனை சிவத்திரு.கு.வை.க.வைத்தீசுவரக்குருக்கள் வெளியிட்டுவைக்க, முதற்பிரதியினை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகை அதிபர் திரு.திருமதி.அ.பி.ஜெயராஜா தம்பதியர் பெற்றுக்கொண்டனர். சைவசமயம்,சைவசமயத்தில் வழிபடு கடவுள், சைவ சமய நூல்கள், விடைக்கொடி என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளுடன், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் வரலாறுகளையும், கழகத்தினால் சைவம்போற்றுதும் விழாவிற் விருதுவழங்கப்பட்ட சைவச்சான்றோர் பற்றிய சிறுகுறிப்புக்களையும்…

  • |

    ஐயம் தெளிதல் – 2019

    சைவ அமைப்புக்கள் பல இணைந்து இந்துசமய,கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு “ஐயம் தெளிதல்” நிகழ்ச்சி 02- -02 – 2019ம் நாள், கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதில் இலங்கை சைவநெறிக் கழகமும் இணைந்து பங்காற்றியது. கனடா சைவசித்தாந்த மையத்தின் தலைவர் மரு.இ.இலம்போதரன் அவர்கள் ஐயம் தெளிதல் அரங்கில் திணைக்களத்தினால் தொகுத்து வழங்கப்பட்ட  கேள்விகளுக்கு விடையளித்தார்.      

  • |

    தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அரங்கில் (2019-10-18), இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் (SLAS) அவர்கள் சமர்ப்பித்த தென்னிலங்கையில் அமையப்பெற்றுள்ள ஐந்தாவது ஈசுவரம் என்று நம்பப்படுகின்ற கோயில் சார்ந்த ஆய்வுக்கட்டுரை தெரிவாகி, பேராசிரியப்பெருமகனார் திரு. சி. பத்மநாதனார் தலைமையிற் நடைபெற்ற சபையோர் கூடிய அரங்கில் பல்லூடக அரங்க அளிக்கையாக அரங்கேற்றப்பட்டது.                              …

  • |

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…