மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழாவின்போது(27-02-2020) சொற்பொழ்வு ஒன்றினை இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் ஆற்றுமாறு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள், உறுப்பினர் திரு.பவிசன் ஆகியோருடன் மாத்தளை நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணிந்து, “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில், தேசிகர் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். கலாபூஷணம் சிவநெறி ஐயர், சிவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக இச்சொற்பொழிவு அமைந்திற்று.

comments