இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர். மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது. இவ்வாலயத்தின்…