கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி


தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, தென்னிலங்கை மலையத்தமிழ் மாணவரின் கல்வி வளர்ச்சிக்குரிய பணிகளில் பங்கேற்றுக்கொண்டது. comments
புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார். comments
களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. comments
இலங்கையிற் பண்பாட்டையும் தத்துவத்தையும் கலையுடன் இணைத்து சைவம் வளர்க்கும் நிகழ்வுகள் அரிதென்ற நிதர்சனத்தினை உய்த்துணர்ந்த, இலங்கை சைவநெறிக் கழகத்தார் “சைவம் போற்றுதும்- 2018” என்கின்ற விழாவினை முதன்முதலில் 07ம் நாள் ஏப்பிரல் மாதம் 2018 அன்று, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் அரங்கேற்றினர். இவ்விழாவிற்கு முதன்மை அனுசரணையை வெள்ளவத்தை நித்தியகல்யாணி நகைமாளிகையினரும், துணை அனுசரணையை சைவநெறித் தொண்டர் கழகம்-கனடா, சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை -டென்மார்க்,லிட்டில் ஏசியா எம்போரிய ஆடையகத்தினர் வழங்கியிருந்தனர்….
அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணியால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கதிர்காமம் தண்ணீர்ப் பந்தல் திருப்பணியில், சைவ சமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக இணைந்து பணியாற்றிவரும் மரபின் தொடர்ச்சியாக, இவ்வாண்டும் கதிர்காமத் திருவிழாவின்போது கதிர்காம மலையேறும் முருகபத்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் இறைதொண்டினைச் சிறப்பாக 05 -08- 2016ஆம் நாள் நடத்தக்கூடியதாகத் திருவருளால் அமையப்பெற்றது. comments
2018ம் ஆண்டு 12ம் மாதம் ஏற்பட்ட வடபகுதி வெள்ளப்பெருக்கினாற் இடம்பெயர்ந்து அல்லலுற்ற மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பெருந்தொகையிற் அத்தியாவசியப்பொருட்கள் சேகரித்தபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் பொருட்களைக் கொள்வனவு செய்து, அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் கையளித்தனர். burst burst burst mde comments