கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015

இந்துக் கல்லூரி இரத்மலானையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் கற்பகவிநாயகரின் பெயரால் உதயமான கற்பக விநாயகர் தொண்டர் அணி பல்லாண்டுகளாக கதிர்காமத்திற் தண்ணீர்ப்பந்தல் அமைத்து, முருகப்பெருமானின் அடியார்களின் தாகம் தீர்க்கும் திருப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். 2015ம் ஆண்டு நடைபெற்ற தண்ணீர்ப் பந்தலின்போது, கழகமும் உத்தியோகபூர்வமாக நிதிப்பங்களிப்புச் செய்து இணைந்து கொண்டது.

கழகத்தின் உறுப்பினர்களான சைவத்திரு. கோபால் இளையராஜா, சைவத்திரு.சி.விநோதரூபன்,சைவத்திரு.இரா.இராஜ்குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் பல்லாண்டு காலங்களாக கற்பக விநாயகர் தொண்டர் அணியினை உருவாக்கி, சைவத்திரு.இளையராஜா அவர்களின் மேற்பார்வையிலும் ஒழுங்கமைப்பிலும் இச்சிவப்பணி திறம்பட மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments