சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

05ம் திகதி எட்டாம் மாதம் 2013ம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் திருத்தலத்தில்  ஆடி அமாவாசை திருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
 

இவ்வாறு தொடங்கப்பட்ட இத்திருப்பணி பல்வேறு ஆலயங்களில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டவாறுள்ளது.

   
சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும்வகையில் துண்டுப்பிரசுரங்கள் அமைக்கப்பட்டு, சைவாலயத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் சைவசமயத்தாரிடம் அளிப்பது சைவசமய விழிப்புணர்வினை சைவமக்களிடம் ஆக்கபூர்வமாக ஏற்படுத்தும்.  நாவலர் பெருமானும் இவ்வுத்தியினைக் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

comments