திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே!
திருவள்ளுவர் பெருமானினை திருநீறு அணிவித்து யாழ்ப்பாணத்தில் சிலை வைத்ததும் நாத்தீக ஈவேராவியல் அரசியலால் செல்வாக்குப்பெற்ற சிலர்,” திருவள்ளுவர்பெருமானுக்குத் திருநீறு அணிவிக்கலாமா?” என்று சமூக ஊடகங்களில் விசனங்களைப் பரப்பத் தொடங்கினர். இதன்போது, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்களால், திருவள்ளுவநாயனாரின் திருநெறி சைவத்திருநெறியே என்பதனை நன்கு விளக்கிக் காணொளி 25 – 03 – 2023ஆம் நாள் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டது.
