இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018

2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது.

இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே இப்பணியைப் பொறுப்பெடுத்து ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

2

comments