| |

செவ்வண்ணன் அடிசேர்ந்த சேக்கிழார் அடிப்பொடியார்

தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பெரும் பணிகள் பல ஆற்றிய சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் அவர்கள் கடந்த 2021இல் தன் சிவபதம் அடைந்தார். சைவசித்தாந்தம், பாரதியார் பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள அன்னார், பெரியபுராணம் மீது கொண்ட ஈடுபாட்டால் தனக்கு “சேக்கிழார் அடிப்பொடி” எனும் புனைபெயரைச் சூடிக்கொண்டவர்.

அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும் அன்புபாராட்டும் வகையிலும் இலங்கை சைவநெறிக் கழகம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையோடு இணைந்து, சிவபதப்பேறுக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு, இலங்கைச் சைவப்பெருமக்களின் நன்றியுணர்வையும் சேக்கிழார் அடிப்பொடிப் பெருமகனார்பால் இலங்கைச் சைவப்பெருமக்கள் கொண்டுள்ள பற்றையும் தெரிவித்துக்கொள்ளக்கூடியதாகவிருந்தது.

 

comments

Similar Posts