அலகிலா ஆடல்- சைவத்தின் கதை நூல் விமர்சனக் கட்டுரை


கொரணை புரோசேஸ்டர் கோவின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு(14-04-2018) ஆகமசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து சிவாச்சாரியார் சகிதம் சென்று, அவ்வூர் மக்களின் ஆலயபரிபாலனம் தொடர்பான ஆகம ஐயங்களை நீக்கி இலங்கை சைவநெறிக் கழகத்தாற் வழிகாட்டப்பட்டது. comments
2018ம் ஆண்டு 12ம் மாதம் ஏற்பட்ட வடபகுதி வெள்ளப்பெருக்கினாற் இடம்பெயர்ந்து அல்லலுற்ற மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பெருந்தொகையிற் அத்தியாவசியப்பொருட்கள் சேகரித்தபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் பொருட்களைக் கொள்வனவு செய்து, அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் கையளித்தனர். burst burst burst mde comments
டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழையானது, 22ஆம் திகதி முதல் கொடும் மழையாகப் பெய்யத்தொடங்கியதனால் இலங்கையின் வடபகுதி பெரும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகி, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் தஞ்சமடைய வேண்டிய இடர் ஏற்பட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், வவுனியா,முல்லைத்தீவு ஆகிய தமிழ்ப் பகுதிகளே இவ்வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகிய இடங்களாகும். இவ்வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட இடர்காலத்தில், அகில இலங்கை இந்து மாமன்றம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, வடபகுதியில் நேரடியாகப்…
பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள் நாவலர் விழாவினை நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.
2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகளில் சிவஞானபோதப் பாடம் எடுத்துவரும் சைவப்புலவர் சு.செல்லத்துரை பெருமகனாருக்கு “சைவநெறிச் செம்மல்” விருது வழங்கி, இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் போற்றப்பட்டார். (வலம்புரி பத்திரிக்கையில் வந்த இருநூல் அறிமுக விழாச் செய்தி) comments
ஞாயிறு வீரகேசரிப் பத்திரிக்கை இலங்கை சைவநெறிக் கழகத்தால் வழங்கப்பட்ட ”சைவம் போற்றுதும்” நிகழ்ச்சி குறித்த செய்தியை மிகவும் சிறப்பாக வெளியிட்டிருந்தனர். ஞாயிறு வீரகேசரி முதன்மை ஆசிரியர் திரு.பிரபாகன் அவர்கள் மக்களிடம் இவ்விழா குறித்த செய்தி சென்றடையவேண்டும் என்று கொண்டிருந்த கரிசனையின் வெளிப்பாட்டை சைவம் போற்றுதும் குறித்த செய்தியினை வெளியிட்டு வைத்துள்ள விதம் உணர்த்தியுள்ளது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் நன்றி அப்பெருமகனாருக்கு என்றும் உரித்தாகுக. சைவம் போற்றுதும் விழாவில் இடம்பெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை வீரகேசரி நிருபர் செய்தியாக வெளியிட்டிருந்தார். comments