நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும் நாவலர் சபையின் உபசெயலாளருமான மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

நாவலர் பெருமான்பால் பத்தியுள்ளமுடையவரும் ஓவியங்களால் சிவநெறிக்குத் தொண்டாற்றிக்கொண்டிருப்பவருமான ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு விருதும் பொற்கிழியும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதியுதவியிற்கு அமைவாக இலங்கை சைவநெறிக் கழகத்தால்  பொற்கிழி வழங்கப்பட்டது.

 

comments