நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

இலங்கைத் தேசிய கல்வி நிறுவனத்தில் நவராத்திரிச் சிறப்புச் சொற்பொழிவினை ஆங்கிலத்தில் ஆற்றுவதற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கைத் தேசிய இனங்களின் ஒற்றுமையை நவராத்திரியினூடாக் காணல் என்னும் கருப்பொருளில் ஆங்கிலத்தில் நவராத்திரியின் விளக்கத்தினையும் இலங்கையில் சமய நல்லிணக்கம்,இன நல்லிணக்கம் என்பவற்றை ஏற்படுத்த சமயத் தத்துவவியல்களினூடான பாதையையும் விளக்கி உரையாற்றியிருந்தார்கள்.

கொழும்பு தெமட்டக்கொடை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற நவராத்திரியை முன்னிட்டான வாணிவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நவராத்திரியின் தத்துவ விளக்கத்தினைச் சிற்றார்க்கும் பெரியாருக்கும் ஏற்றாற்போல் கணினி அரங்க அளிக்கையூடாக கழகத்தின் தலைவர் எடுத்தியம்பினார்.

comments