மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்


இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும்…
வீரகேசரியில் இடைக்கண் முறிந்தார் பலர் என்னும் தலைப்பில் கம்பவாரிதியவர்களின் கேரள டயரிகுறித்த விமர்சனக்கட்டுரை வெளியாகியிருந்தது. அக்கட்டுரையில் நாவலர் பெருமான் காலமாற்றத்தை உள்வாங்கவில்லை என்று குறைபட்டிருந்ததோடு, நாவலர்பெருமான் சாதிப்பாகுபாட்டினைத் திணித்தார் என்பதுபோல் பொருள்கொள்ளுமாறு தம்கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தார். இதற்குரிய மறுப்பினை கழகத் தலைவர் சைவத்திரு.மரு.கி.பிரதாபன் அவர்கள் எழுதி வீரகேசரிப் பத்திரிக்கைக்கு வழங்கினார். வீரகேசரிப் பத்திரிக்கை நிர்வாகமும் மறுப்புக்கட்டுரையின் அவசியத்தை உணர்ந்து தமது 05-11-2007 ஞாயிறு பதிப்பில் வெளியிட்டு உதவினர். சைவவினாவிடை என்பது எந்தவொரு விளக்கவுரைகளும் வழங்காது கேள்வி விடையாக…
தென்னிலங்கையில் காலிமாநகரில் முதன்மைக் காலி வீதியில் விளங்கும் அருள்மிகு மீனாட்சி உடனாய சுந்தரேசுவரப்பெருமான் திருக்கோயிலானது, சைவப்பெருமக்களால் காலிமாநகர் சிவன் கோயில் என்று அறியப்பட்டுவரும் சிறப்புடைய சிவாலயமாகும். 05 -03 – 2019ஆம் நாள் இரவு சிவராத்திரி விரதத் திருநாளினை முன்னிட்டு இத்திருத்தலத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர், இந்துசமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் கணக்காளர் திரு.காண்டீபன் அவர்களுடன் பயணம் செய்து,” நம் சிவபெருமான் பெருமைகள்” என்னும் கருப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார். comments
பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள் நாவலர் விழாவினை நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.
இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக…
1969ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப்பட்ட நாவலர் மாநாட்டு மலரினை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் மறுபதிப்பாக அச்சேற்றப்பட்டு, 03-08-2013 ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மண்டப நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோடு, நூல்களை மண்டபத்தில் விற்கும் பொறுப்பினையும் ஏற்று, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) மரு.கி.பிரதாபன் அவர்களின் தலைமையில் அவற்றையெல்லாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தது.