Similar Posts
சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013
05 – 08 – 2013ஆம் நாளன்று மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…
2018 | சமயப்பணி | சமூகப்பணி | சைவ அறநெறிபுத்தளம் பள்ளிவாசற்துறை சைவக்கிராமத்திற் கழகப்பணி 2018
இலங்கை சைவநெறிக் கழகத்தினாற் புத்தளம் பள்ளிவாசற்துறை பெரியசந்திக்கிராமம் ஐயனார் ஆலயத்தினை மீளப்புதுப்பித்தல் பணிகளுக்கு 20,000/= நன்கொடையும், திரைச்சீலைகளும் வழங்கப்பட்டதுடன், ஆலயத்தின் அறநெறி வகுப்பில் கல்வி கற்கும் மாணவருக்கு சமயக்கருத்தரங்குகளை 04-03 – 2018ம் ஆண்டு நடத்தியதுடன், அம்மாணவர்க்கு புத்தகப்பைகள் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத்தில் துண்டுப்பிரசுரங்கள் கையளித்தல் 2014
கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீசுவரத் திருக்கோயிலுக்கு ஒருதொகைத் துண்டுப்பிரசுரம் கையளித்தல் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) உறுப்பினர் மருத்துவர் ஆசைப்பிள்ளை சயூரதன் அவர்கள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சுவரத்தில் திருக்கோயிலுக்கு வரும் அடியாருக்குக் கையளிப்பதற்காகக் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் 21-10-2014ஆம் திகதியன்று ஒருதொகைத் துண்டுப்பிரசுரங்களைக் கோயிற் தொண்டரிடம் வழங்கி வைத்தார். comments
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை
கோவிட்நோய் தொற்றுக்காலத்தில் இலங்கை அரசாங்கம் ஒன்றுகூடல்களினைத் தடைசெய்தபோது மக்களிடம் கோயில் திருவிழாக்களினை நடத்துதல் குறித்து குழப்பங்கள் எழும்பியபோது, இலங்கை அரசாங்கத்தின் செயல், மருத்துவ விஞ்ஞானபூர்வமானதென்பதினால் சைவமக்கள் அதனை மதித்தொழுக வேண்டும் என்பதுடன், சிவாகமங்கள் நாட்டில் அபாயங்கள் எழும்போது ஆலயப்பூசைகள் விழாக்கள் தடைப்படுவதினை ஏற்று அருள்வதினைச் சுட்டிக்காட்டி, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை. comments
சுவாமி விவேகானந்தர் சபை-அறநெறிப் பாடசாலையில் சைவ விழிப்புணர்ச்சி வகுப்பு 2019
கொழும்பு சுவாமி விவேகானந்தர் சபையில் நடைபெறும் அறநெறி வகுப்புக்கு பயணம்செய்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பிரதித் தலைவர் சித்தாந்தரத்தினம் செல்வி.செ.உதயகௌரி அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இணைந்து, அறநெறி வகுப்பிற் கல்விகற்கும் மாணவர்க்கு சமய விழிப்புணர்ச்சி வகுப்புகள் (20-01-2019) எடுத்தனர். …
மாத்தளை காந்தி நினைவாலய நூலகத்திற்கு சைவநூல்கள் அன்பளிப்புச் செய்தல்
மாத்தளை மாநகரில் அமையப்பெற்றுள்ள மகாத்மா காந்தி நினைவாலய நூலகத்திற்கு இலங்கை சைவநெறிக் கழகத்தின் வெளியீடுகளான சைவத்தின் கதை-அலகிலா ஆடல், சிவப்பிரகாசக்கதவம், சைவம் போற்றுதும் நூல்கள், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித் தலைவர் திரு. சி. வினோதரூபன் அவர்கள் வழங்கி வைக்கும் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள்.விடைக்கொடிச்செல்வர் திரு. சின்னத்துரை தனபாலா அவர்கள் உடனுள்ளார்கள். comments

.jpg)
.jpg)
.jpg)
.jpg)