தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்

சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள்  குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை இலவசமாக வழங்கிடும் திருப்பணியைப் பொறுப்பெடுத்ததுடன், கழக உறுப்பினர்களே நேரடியாகச் சென்று மாணவர்களிடம் வழங்கினர்.
சிறுவர்களுக்குரிய சைவசமயக் கதைகளை, இந்நிகழ்வின்போது கழகத்தாரால் சிறுவர்களுக்கேற்ற பாணியில் எடுத்துச்சொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்க வேண்டிய விடயமாகும்.