Similar Posts
இடபக்கொடியினை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமே தவிர்க்கவேண்டிய இடர் – கழகம் வெளியிட்ட எதிர்ப்பு!
இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட “திருமுறையும் சைவத்திருநெறியும்” என்கின்ற சைவத்திருமுறை மாநாட்டில் இடபக்கொடிகளினால் வீதிகளும் விழா மண்டபமும் அலங்கரிக்கப்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் இந்து ஸ்வயம் சேவா சங்கம் முதலியவற்றின் ஆலோசனையினை ஏற்று அந்த அமைப்பின் இலங்கைக்குரிய கௌரவத்தலைவர் முதலிய பதவிகளில் இருந்தமையினால், இடபக்கொடியினை பயன்படுத்துவதில் அவருக்கு நாட்டம் இருக்கவில்லை. இடபக்கொடிக்குப் பதிலாக காவிக்கொடியினையே தூக்கிப்பிடிக்கும் செயலுக்கு துணை நிற்கலாயினார். இச்சந்தர்ப்பத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சரின் மனதிற்கு இதமாக…
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்கு
சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது. comments
சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம்
சுவாமி ஞானப்பிரகாசர் பெருமானாருக்கு திருவுருவப்படம் இல்லாக்குறையை நீக்கும்பொருட்டு, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 2018ம் ஆண்டு நடைபெற்ற சைவம்போற்றுதும் விழாவிற்காக வரைந்துகொள்ளப்பட்ட திருவுருவப்படம். | இலங்கை சைவநெறிக் கழகத்தின் வேண்டுகோளினை ஏற்று, கழகத்தின் தலைவர்,பொதுச்செயலாளர் ஆகியோரின் சிந்தனைகளை உள்வாங்கி ஓவியமாக வெளிக்கொண்டு வந்த ஓவியர் ஞானகுரு அவர்களுக்கு சைவம்போற்றுதும் விழாவில்(07-04-2018) இலங்கை சைவநெறிக் கழகத்தினரால் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பளிக்கப்பட்டார். comments
சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013
05 – 08 – 2013ஆம் நாளன்று மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…
இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019
இரத்தினபுரி மாவட்டத்தில் கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுதோறுமான திருவிழாவில் அன்னதானப்பணியை வழமைபோன்று இவ்வாண்டும் (23-03-2019) இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தியது. பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன்,பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா , பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இப்பணி ஆண்டுதோறும் சிறப்புற நடைபெற்று வருவதுடன், அங்குள்ள மக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகம் இரண்டறக் கலந்துறவாட இது அருமையான வாய்ப்பாக அமைந்துவருதல் சிறப்பம்சமாகும்.
தமிழ்நாட்டின் பேரூர் ஆதீனம் ஏற்பாடு செய்த நாவலர் பெருமான் குருபூசை நிகழ்வு
தமிழ்நாட்டில் உள்ள வீரசைவ மரபினைச் சேர்ந்த பேரூர் ஆதீனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட தவத்திரு ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூசையினை முன்னிட்டான இணையவழி நிகழ்வு 07 – 12 – 2020 ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் இணையவழியினூடாக இணைந்து கொண்டு, கழகத் தலைவர் அவர்கள் நாவலர்பெருமான் பற்றிய சொற்பொழிவினை நிகழ்த்தியிருந்தார். comments


























