ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

  • | |

    நாவலர்பெருமான் குருபூசை -2023

    ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இலங்கை சைவநெறிக் கழகம்,ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம், இந்து வித்தியா விருத்தி சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து  நாவலர்பெருமான் குருபூசை 04 – 12 – 2023ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பாடசாலை மாணவர், சைவசமய அறநெறிப் பாடசாலை மாணவர் முதலியோரின் பங்களிப்புடன் இக்குருபூசை இனிதே நடைபெற்றது. இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் சொய்சாப்புரம் மெய்கண்டார் சைவசமய அறநெறிப்…

  • | |

    நாவலர் விழா 2022

    நாவலர்பெருமானின் 200ஆவது ஆண்டு உதித்த நன்னாளினைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விண்ணப்பத்திற்கு ஏற்ப, நாவலர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகள் நாவலர்பெருமானைச் சிறப்பிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இதன் அங்கமாக, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபையின் ஏற்பாட்டில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கைச் சைவநெறிக் கழகம் அடங்கலாகப் பல்வேறு சைவ அமைப்புக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, நாவலர்பெருமான் குருபூசையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த…