ஊர்க்காவற்றுறையில் சைவப்பெயர்களைக் காத்த இலங்கை சைவநெறிக் கழகம்

ஊர்க்காவற்றுறையில் விளங்கும் சைவப்பெயர்களுடனான வீதிகளுக்கு கிருத்தவப் பெயர்கள் வைக்கும் செயன்முறையொன்று ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபையைப் பயன்படுத்திக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் மேற்கொண்ட செயலானது, இலங்கை சைவநெறிக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடனே,  பல்வேறு சைவ அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டு கண்டனக் கடிதங்களை ஊர்க்காவற்றுறைப் பிரதேச சபைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ததோடு, இலங்கை சைவநெறிக் கழகமும் வீதிகளுக்கு சைவப்பெயர்களை அழித்து கிருத்தவப் பெயர்களைப் புகுத்தும் செயல் இலங்கையில் தமிழரிடையே ஒற்றுமையைக் குலைக்கும் என்பதனை விளக்கி, இச்செயலைக் கைவிடுமாறு ஊர்காவற்றுறைப் பிரதேச சபைக்குக் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டது. சமூக ஊடகங்களிலும்பொது ஊடகங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  இந்நடவடிக்கையைக் கைவிடுவதாக ஊர்க்காவற்றுறை பிரதேச சபை அறிவித்ததுடன், இலங்கை சைவநெறிக் கழகத்திற்கும் தெளிவூட்டற் கடிதத்தை அனுப்பிவைத்திருந்தனர்.




comments