• |

    சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை

    கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் கழகத்தாரால் 10-10-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு மாணவரிடம் சைவசமயத் தெளிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் கல்லூரி அதிபரின் அனுமதியைப் பெற்று, வகுப்புத் தோறும் சைவசமய ஐயம் தெளிதல் வகுப்புக்களை சிறப்புற நடத்தியிருந்தனர். எமது சமயத்தின் பெயர் சைவசமயம் என்று உணர்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும்,…

  • |

    இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014

    இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற  திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர். மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது. இவ்வாலயத்தின்…

  • |

    தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்

    சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள்  குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை…

  • |

    இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி

    இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சார்ந்த உஜாலினி என்னும் 23 வயதுப் பெண்ணொருவருக்கு ASD Secondum என்னும் சிறு இதய துவாரப் பிரச்சினை இருந்துவந்தும் அப்பெண்ணுக்குரிய சத்திரசிக்கிச்சைக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து பண உதவிபெறுவதற்குதேவையான கடிதங்களை யாழ்.போதனா வைத்க்தியசாலை இதய நிபுணர் வழங்கியிருந்தும், அப்பெண்ணின் பெற்றோரால் பணச்சிக்கல்கள்,மொழிச்சிக்கல்களால் அவ்வுதவிகளைப் பெறாது இருந்தமையை அறிந்துகொண்ட கழகம், அப்பெண்ணின் பெற்றோர் கொழும்பிலுள்ள சனாதிபதி செயலகத்துக்கு சென்று குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்குரிய போக்குவரத்து, தங்குமிடம், உணவு…

  • |

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015

    கழகத்தின் உறுப்பினர்களான சைவத்திரு. கோபால் இளையராஜா, சைவத்திரு.சி.விநோதரூபன், சைவத்திரு.இரா.இராஜ்குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் பல்லாண்டு காலங்களாக அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) பங்களிப்புடன் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டும் 30 ஜூலை 2015ஆம் நாள் கழகத்தின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.