Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்
    2018 | சமூகப்பணி

    வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்

    Byilankaisaivism 2020-03-212020-05-07

    2018ம் ஆண்டு 12ம் மாதம் ஏற்பட்ட வடபகுதி வெள்ளப்பெருக்கினாற் இடம்பெயர்ந்து அல்லலுற்ற மக்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பெருந்தொகையிற் அத்தியாவசியப்பொருட்கள் சேகரித்தபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் பொருட்களைக் கொள்வனவு செய்து, அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் கையளித்தனர். burst burst burst mde

    Read More வடபகுதி வெள்ளப்பெருக்கில் அல்லலுற்ற மக்களுக்கு கழகத்தின் அன்புக்கரம்Continue

  • கொரணைப் பிரதேசத் தமிழ் மக்களுக்கு ஆகம ஆலோசனை வழங்கல்
    2018 | சமயப்பணி

    கொரணைப் பிரதேசத் தமிழ் மக்களுக்கு ஆகம ஆலோசனை வழங்கல்

    Byilankaisaivism 2020-03-212020-05-07

    கொரணை புரோசேஸ்டர் கோவின்ன தோட்டம் முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு(14-04-2018) ஆகமசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து சிவாச்சாரியார் சகிதம் சென்று, அவ்வூர் மக்களின் ஆலயபரிபாலனம் தொடர்பான ஆகம ஐயங்களை நீக்கி இலங்கை சைவநெறிக் கழகத்தாற் வழிகாட்டப்பட்டது.

    Read More கொரணைப் பிரதேசத் தமிழ் மக்களுக்கு ஆகம ஆலோசனை வழங்கல்Continue

  • சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013
    2013 | சமயப்பணி | துண்டுப்பிரசுரம்

    சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013

    Byilankaisaivism 2020-03-202025-04-09

    05 – 08 – 2013ஆம் நாளன்று  மாவிட்டபுரம் திருக்கோயில் தேர்த்திருவிழாவில் துண்டுப்பிரசுர விநியோகப்பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேசத்திலுள்ள திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமித் திருக்கோயிலின் ஆடி அமாவாசைப் பெருவிழாவின்போது (06-08-2013) சைவசமய விழிப்புணர்ச்சித் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.   தொடர்ந்து கொழும்பு பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில்ககள் என்பவற்றில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நல்லூர் திருக்கோயில் முதலிய பல்வேறு சைவாலயங்களில் துண்டுப்பிரசுரம் கொடுக்கும் திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. சைவசமய மக்களுக்கு சைவசமயம் குறித்த தெளிவினை உருவாக்கும் வகையில்…

    Read More சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப் பணி -2013Continue

  • இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!
    2013 | இடபக்கொடி | சமயப்பணி | சைவசமய இடர்களைவுப் பணி

    இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!

    Byilankaisaivism 2018-04-052025-04-09

    இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ”ஸ்ரீ குருபூஜா விழா” என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று,  விவேகானந்த சபை மண்டபத்தில்  விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த  இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ”காவிக்கொடி” அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில்…

    Read More இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!Continue

  • நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்
    2013 | சமயப்பணி

    நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்

    Byilankaisaivism 2018-04-052025-04-09

    1969ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் வெளியிடப்பட்ட நாவலர் மாநாட்டு மலரினை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையால் மறுபதிப்பாக அச்சேற்றப்பட்டு, 03-08-2013 ஆம் நாள் கொழும்பு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் மண்டப நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதோடு, நூல்களை மண்டபத்தில் விற்கும் பொறுப்பினையும் ஏற்று, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) மரு.கி.பிரதாபன் அவர்களின் தலைமையில்  அவற்றையெல்லாம் செவ்வனே நிறைவேற்றியிருந்தது.    

    Read More நாவலர் மாநாடு மலர் மறுபதிப்பு வெளியீட்டு விழாவில் கழகம்Continue

  • சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை
    2013 | சமயப்பணி

    சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானை

    Byilankaisaivism 2018-04-052025-04-09

    கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானையில் கழகத்தாரால் 10-10-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு மாணவரிடம் சைவசமயத் தெளிவை மேம்படுத்தும் வகையில், இலங்கை சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) தலைவர் மரு.கி.பிரதாபன் அவர்களும், பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்களும் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் கல்லூரி அதிபரின் அனுமதியைப் பெற்று, வகுப்புத் தோறும் சைவசமய ஐயம் தெளிதல் வகுப்புக்களை சிறப்புற நடத்தியிருந்தனர். எமது சமயத்தின் பெயர் சைவசமயம் என்று உணர்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தையும்,…

    Read More சைவ சமய விழிப்புணர்ச்சி வகுப்பு-இந்துக் கல்லூரி, இரத்மலானைContinue

  • இரத்னபுர மாவட்ட  ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014
    2014 | சமூகப்பணி

    இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014

    Byilankaisaivism 2018-04-052024-06-29

    இரத்தினபுரி கலத்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 2014-03-19ம் நாள் நடைபெற்ற  திருவிழாவில் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினர்(இலங்கை சைவநெறிக் கழகம்), மாகேசுவரபூசையை ஒழுங்குசெய்திருந்தனர்.மாகேசுவர பூசை என்பது திருக்கோயிலுக்கு வருகை தந்துள்ள அடியார்களைச் சிவமாகவே கொண்டு திருவமுது செய்து உய்வுபெறும் அருட்செயலாகும். அதாவது, மகேசுவரனாகிய சிவபெருமானைத் தம் இதயத்தில் தாங்கி நிற்கும் அடியார்கள் மாகேசுவரர் எனப்படுவர். மேற்குறித்த நிகழ்வு கனடாவில் உள்ள திரு.கஜானந் அவர்களின் நிதியுதவியில், கழக துணைச் செயலாளர்கள் திரு.கோ.இளையராஜா,திரு.சி.வினோதரூபன் ஆகியோரின் நெறிப்படுத்துகையில் நடைபெற்றது. இவ்வாலயத்தின்…

    Read More இரத்னபுர மாவட்ட ஆலய திருவிழாவில் கழகத்தாரின் அன்னதானம் 2014Continue

  • தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்
    2014 | சமூகப்பணி

    தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்

    Byilankaisaivism 2018-04-052025-04-10

    சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தினரால்(இலங்கை சைவநெறிக் கழகம்) 05- 09- 2014 அன்று மட்டக்களப்பிலுள்ள முறக்கொட்டான்சேனையில் தேவபுரம் என்னும் பகுதியில் உள்ள பாலர் பாடசாலையான (ஆண்டு 1 இல் இருந்து ஆண்டு ஐந்துவரை) கஜமுகன் வித்தியாலத்தில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 புத்தகப்பைகள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் சைவசமூகத்தைச் சார்ந்த மீனவத்தொழிலை உடைய மக்களின் பிள்ளைகளே அதிகம் பயில்கின்றனர் என்பதையும், இம்மாணவர்கள் புத்தகப்பைகள்,காலணிகள் போன்ற வசதிகள்  குறைந்தவர்களாக உள்ளனர் என்பதையும் அறிந்துகொண்ட சைவ சமூகத் திருப்பணிக் கழகம், புத்தகப்பைகளை…

    Read More தேவபுரம் கஜமுகன் வித்தியால பள்ளிக்கூட மாணவர்க்கு புத்தகப்பைகளை வழங்குதல்Continue

  • இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி
    2014 | சமூகப்பணி

    இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி

    Byilankaisaivism 2018-04-052025-04-10

    இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவி மட்டக்களப்பு வெள்ளாவெளி பிரதேசத்தைச் சார்ந்த உஜாலினி என்னும் 23 வயதுப் பெண்ணொருவருக்கு ASD Secondum என்னும் சிறு இதய துவாரப் பிரச்சினை இருந்துவந்தும் அப்பெண்ணுக்குரிய சத்திரசிக்கிச்சைக்கு சனாதிபதி செயலகத்திலிருந்து பண உதவிபெறுவதற்குதேவையான கடிதங்களை யாழ்.போதனா வைத்க்தியசாலை இதய நிபுணர் வழங்கியிருந்தும், அப்பெண்ணின் பெற்றோரால் பணச்சிக்கல்கள்,மொழிச்சிக்கல்களால் அவ்வுதவிகளைப் பெறாது இருந்தமையை அறிந்துகொண்ட கழகம், அப்பெண்ணின் பெற்றோர் கொழும்பிலுள்ள சனாதிபதி செயலகத்துக்கு சென்று குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்குரிய போக்குவரத்து, தங்குமிடம், உணவு…

    Read More இதயத் துவார சரிப்படுத்தல் சத்திரசிகிச்சைக்கு கழகத்தாரின் உதவிContinue

  • கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015
    2015 | சமூகப்பணி

    கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015

    Byilankaisaivism 2018-04-052025-04-10

    கழகத்தின் உறுப்பினர்களான சைவத்திரு. கோபால் இளையராஜா, சைவத்திரு.சி.விநோதரூபன், சைவத்திரு.இரா.இராஜ்குமார் மற்றும் அவர்தம் நண்பர்கள் பல்லாண்டு காலங்களாக அருள்மிகு கற்பக விநாயகர் தொண்டர் அணி என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திருப்பணி, சைவசமூகத் திருப்பணிக் கழகத்தின் (இலங்கை சைவநெறிக் கழகத்தின்) பங்களிப்புடன் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றதனைத் தொடர்ந்து, இவ்வாண்டும் 30 ஜூலை 2015ஆம் நாள் கழகத்தின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.                

    Read More கதிர்காமத் தண்ணீர்ப் பந்தல் -2015Continue

Page navigation

Previous PagePrevious 1 … 11 12 13

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search