சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்
இலங்கை சைவநெறிக் கழகம் முதன்முதலில் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் என்னும் பெயரில் 30-06- 2013ஆம் நாளன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஒன்றுகூடிய பொதுக்கூட்டத்தினூடாகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைத் தோற்றுவிக்கவேண்டும் என்று சிந்தித்த சைவத்திரு.மரு.கி.பிரதாபன், சைவத்திரு.வி.துலாஞ்சனன்,சைவத்திரு.கோ.இளையராஜா,சைவத்திரு.சி.வினோதரூபன் முதலியோர் விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனாரை நாடி, தோற்றுவிக்கப்படும் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் கொள்கைகளை எடுத்துவிளக்கியதோடு, சைவசமயக் கற்புநெறியில் தமிழரை ஆற்றுப்படுத்துவதற்குரிய அமைப்பாகச் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் விளங்கும் என்று உறுதிகூறியதும், விடைக்கொடிச்செல்வர் பெரும் மகிழ்ச்சியுற்றார்….
