Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது  திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்
    2016

    சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்

    Byilankaisaivism 2024-06-292024-06-29

    இலங்கை சைவநெறிக் கழகம் முதன்முதலில் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் என்னும் பெயரில் 30-06- 2013ஆம் நாளன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஒன்றுகூடிய பொதுக்கூட்டத்தினூடாகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பைத் தோற்றுவிக்கவேண்டும் என்று சிந்தித்த சைவத்திரு.மரு.கி.பிரதாபன், சைவத்திரு.வி.துலாஞ்சனன்,சைவத்திரு.கோ.இளையராஜா,சைவத்திரு.சி.வினோதரூபன் முதலியோர் விடைக்கொடிச்செல்வர் சைவத்திரு.சின்னத்துரை தனபாலா பெருமகனாரை நாடி, தோற்றுவிக்கப்படும் சைவ சமூகத் திருப்பணிக் கழகத்தின் கொள்கைகளை எடுத்துவிளக்கியதோடு, சைவசமயக் கற்புநெறியில் தமிழரை ஆற்றுப்படுத்துவதற்குரிய அமைப்பாகச் சைவ சமூகத் திருப்பணிக் கழகம் விளங்கும் என்று உறுதிகூறியதும், விடைக்கொடிச்செல்வர் பெரும் மகிழ்ச்சியுற்றார்….

    Read More சைவத்திரு.மு.கதிர்காமநாதன் பெருமகனார் சிவபதம் பெற்றபோது திருமுறை ஓதி வழிபட்ட கழகத்தார்Continue

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப்பணி 2016
    2016

    சிவராத்திரித் திருநாளில் சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப்பணி 2016

    Byilankaisaivism 2024-06-292025-04-10

    சிவராத்திரித் திருநாளினை முன்னிட்டு 07-03-2016 ஆம் நாள் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் தலைமையில் கொழும்பில் உள்ள சைவாலயங்களில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.

    Read More சிவராத்திரித் திருநாளில் சைவசமயத் துண்டுப்பிரசுர விநியோகப்பணி 2016Continue

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு
    2016

    சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு

    Byilankaisaivism 2024-06-292025-04-10

    சிவராத்திரித் திருநாளில் 07-03-2016 ஆம் நாள்  அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணியகத்தில் மாமன்ற விடுதி மாணவரிடத்தே சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்கு கழகத் தலைவர் சைவத்திரு.கி.பிரதாபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, கேள்வி பதில்களாகச் சைவசமய விழுமியங்கள் மாணவரிடம் பரிமாறப்பட்டது.சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களும் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும் ஏனைய கழக உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன், மாமன்றப் பொதுச்செயலாளர் திரு.தில்லை நடராசா அவர்களும், மாமன்ற உபதலைவர் விடைக்கொடிச்செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்களும் தலைமை வகித்தனர்.

    Read More சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுக் கருத்தரங்குContinue

  • காஞ்சி சங்கராசாரிய சுமார்த்தமதத்தாரிடம் சைவசமய அந்தணர் பயிற்சி பெறுவதா? தடுத்து நிறுத்தும் சிவப்பணி!
    2015

    காஞ்சி சங்கராசாரிய சுமார்த்தமதத்தாரிடம் சைவசமய அந்தணர் பயிற்சி பெறுவதா? தடுத்து நிறுத்தும் சிவப்பணி!

    Byilankaisaivism 2024-06-292025-04-10

    இந்துத்துவ சுமார்த்தமத தரகர்களின் சூழ்ச்சியினால் இலங்கைப் பிரதமர் திரு.இரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்பில் இலங்கை சைவாலயப் பூசகப்பிராமணர் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி சங்கரமடத்தில் சைவாலய சிவாகமப் பூசைப்பயிற்சிக்கு அனுப்பிவைக்கும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகச் செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனை இலங்கையில் உள்ள இந்துகுருமார் அமைப்புக்கள் சிலவும் வரவேற்று அறிக்கைகள் வெளியிட்டன. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கரமடம் சிவாகமப்பாடசாலை ஒருசில சிவாசாரியரைக் கொண்டு நடத்திவருகின்றனர். இப்பாடசாலையிலேயே இவ்வாறு இலங்கை சைவாலய அந்தணர் இலங்கை அரசால் இந்துசமய கலாசார அமைச்சினூடாக சேர்க்கும்…

    Read More காஞ்சி சங்கராசாரிய சுமார்த்தமதத்தாரிடம் சைவசமய அந்தணர் பயிற்சி பெறுவதா? தடுத்து நிறுத்தும் சிவப்பணி!Continue

  • சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரப்பணி 2015
    2015 | Uncategorized

    சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரப்பணி 2015

    Byilankaisaivism 2024-06-292025-07-01

    சிவராத்திரி அருட்திருநாளில் 17 -02- 2015ஆம் நாள் கொழும்பில் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு பிள்ளையார் கோயிலில் கழகத்தால் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    Read More சிவராத்திரித் திருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரப்பணி 2015Continue

  • திருக்கோணேசுவரத் திருத்தலத்தில்  சைவசமய துண்டுப்பிரசுர விநியோகம் 2015
    2015

    திருக்கோணேசுவரத் திருத்தலத்தில் சைவசமய துண்டுப்பிரசுர விநியோகம் 2015

    Byilankaisaivism 2024-06-292025-04-10

    கழக உறுப்பினர் திரு.அ.கஜந்தன், திரு.ச.தாஸ்குமார் ஆகியோர் திருக்கோணேசுவரத் திருத்தலத்திற்கு 2015- 03- 14ஆம் நாள் செல்லும்பேறு பெற்றபோது, திருக்கோயில் அடியார்களுக்கு கழகத்தின் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரத்தினை விநியோகித்தனர்.

    Read More திருக்கோணேசுவரத் திருத்தலத்தில் சைவசமய துண்டுப்பிரசுர விநியோகம் 2015Continue

  • 2022 | சமயப்பணி

    அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்

    Byilankaisaivism 2023-12-282026-03-21

    2022 – 03 – 17ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் உள்ள அருள்மிகு மாணிக்கப்பிள்ளையார் திருக்கோயிலில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடன் இணைந்து இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தின் பங்களிப்புடன் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் சைவசமயதீக்கை வழங்கும் கிரியைகளினைச் சிவாகமவிதிப்படிச் சிறப்புடனே ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் 124 பேர் சைவசமயதீக்கை பெற்றுக்கொண்டனர். சமயதீக்கை பெற்றுக்கொண்டோருக்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் இல்லங்களில் சிவபூசை செய்வது எவ்வாறென்று விளங்கிய அச்சுப்பிரதி நூல்களும் இந்துசமய கலாசார…

    Read More அம்பாறை வளத்தாப்பிட்டியில் சமயதீக்கை வழங்குதல்Continue

  • சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருது
    2022 | சமயப்பணி

    சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருது

    Byilankaisaivism 2023-08-292023-08-29

    கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் வீதி அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாணத் திருவிழாப் பெருநாளில்(23-05-2022), திருக்கோயிலின் அறங்காவலர் சைவத்திரு.கனக.இரகுநாதன் பெருமகனார் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, வழிபட வருகைதந்திருந்த கனடாவாழ் சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் ”சைவமாமணி” விருது வழங்கிப் பாராட்டியது. கனடாவில் இலங்கை சைவமக்களிடையே சைவசமயப் போதனைகளினை நன்றே முன்னெடுத்துவருதல் பொருட்டும், இலங்கையில் அவருடைய சொந்த மண்ணிலும் ஏனைய இடங்களிலும் பல்வேறு சைவசமய அறப்பணிகளுக்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திவருதல் பொருட்டும் இலங்கை சைவநெறிக்…

    Read More சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள் அவர்களுக்கு ”சைவமாமணி” விருதுContinue

  • யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்
    2022 | சமூகப்பணி

    யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்

    Byilankaisaivism 2023-08-29

    தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகளினை ஆவணப்படுத்தும் தனியார் அறக்கட்டளையான ”யாக்கை தொண்டு அறக்கட்டளை” அமைப்பு வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, புலம்பெயர் தேசத்தில் உள்ள சைவ மக்களிடம் விண்ணபித்துப் பெற்றுக்கொண்ட நிதித்தொகையினை (இந்தியப் பெறுமதி 30,400/=) யாக்கை அறக்கட்டளைக்கு வழங்கி, இலங்கை சைவத்தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகளுக்கு பக்கபலமாக விளங்கும் வரலாற்றுப்பாலத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்திக்கொண்டது.

    Read More யாக்கை அறக்கட்டளைக்கு நிதிதிரட்டி வழங்குதல்Continue

  • மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்
    2022 | சமூகசேவை | சமூகப்பணி

    மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்

    Byilankaisaivism 2023-08-292023-08-29

    அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவனுக்கு மேற்படிப்புக்குரிய பரீட்சை எழுதுவதற்குரிய நிதியினை, 21-06-2022ம் நாள் விண்ணப்பித்து வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக,  இலங்கை சைவநெறிக் கழகம் வழங்கியிருந்தது.

    Read More மேற்படிப்புக்குரிய பரீட்சை நிதியினை வழங்கி உதவுதல்Continue

Page navigation

Previous PagePrevious 1 2 3 4 5 6 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search