Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி  2018
    2018 | சமூகப்பணி

    இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018

    Byilankaisaivism 2020-05-082024-06-29

    2018 மார்ச்சு மாதம் 17ம் நாள், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டுதோறுமான திருவிழாவின்போது, வழமைபோன்று இவ்வாண்டும் அன்னத்தானப்பணியைப் பொறுப்பெடுத்து இலங்கை சைவநெறிக் கழகம் சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களின் தலைமையில் செவ்வனே இச்சிவப்பணியை நிறைவேற்றியது. இப்பணியினைத் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் கழகத்தாரும் மேற்கொண்டுவருவதால் அங்குள்ள மக்களும் கழகத்தாருடன் நல்லதொரு உறவினை வலுப்படுத்தியுள்ளார்கள். 2014ம் ஆண்டு,2016ம் ஆண்டு, 2017ம் ஆண்டு,2018ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் இலங்கை சைவநெறிக் கழகம்( சைவசமூகத் திருப்பணிக் கழகம்) செவ்வனே…

    Read More இரத்தினபுரி-கலத்துரத் தோட்ட முத்துமாரியம்மன் ஆலய அன்னதானப்பணி 2018Continue

  • இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் 2016ம் ஆண்டு கழகத்தின் அன்னதானப்பணி
    2016 | சமூகப்பணி

    இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் 2016ம் ஆண்டு கழகத்தின் அன்னதானப்பணி

    Byilankaisaivism 2020-05-082024-06-29

    2016ம் ஆண்டு மார்ச்சு மாதம் இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவின்போது, சைவசமூகத் திருப்பணிக் கழகம் (இலங்கை சைவநெறிக் கழகம்) 2014ம் ஆண்டில் அன்னதானப்பணியைப் பொறுப்பெடுத்தமைபோன்று, இம்முறைத் திருவிழாவிலும் அன்னதானப்பணியினைப் பொறுப்பெடுத்து நடத்தியிருந்தோம். 2014ம் ஆண்டில் பொறுப்பெடுத்தமைக்கு அடுத்ததாக, இவ்வாண்டு மீண்டும் பொறுப்பெடுக்கப்பட்டது. இதனூடாக கழகத்துக்கும் ஊர்மக்களுக்கும் இடையே உறவுப்பாலத்தினை உருவாக்குதல்-வளர்த்தல் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய நல்ல அறிகுறிகள் இவ்வாண்டு நடைபெற்ற அன்னதானப்பணியினூடாக கழகத்தினால் உணரப்பட்டது.    

    Read More இரத்தினபுரி-கலத்துரத்தோட்டத்தில் 2016ம் ஆண்டு கழகத்தின் அன்னதானப்பணிContinue

  • புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017
    2017 | சமூகப்பணி

    புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017

    Byilankaisaivism 2020-05-082024-06-29

    புளத்சிங்கள மிரிசேன இடத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவில் (02-04- 2017 ) அன்னதானப்பணிக்கு ரூபாய் 15,000 இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கப்பட்டது. அன்னதானப் பணிகளில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் சார்பில் பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் அவர்களும் , சைவத்திரு.கோ.இளையராஜா அவர்களும்  கலந்துகொண்டு அங்குள்ள மக்களோடான உறவைக் கழகத்துடன் பிணைப்பதற்குப் பணியாற்றினார்.    

    Read More புளத்சிங்கள- மிரிசேன கிராமத்தில் ஆலய அன்னதானத்திற்கு கழகத்தின் பங்களிப்பு 2017Continue

  • பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்
    2018 | சமயப்பணி

    பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்

    Byilankaisaivism 2020-05-082025-04-24

    அட்டன் பிரதேச பேயாலோன் தோட்டம் (Hatton Fairlawn Estate) முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருத்தற் பணிகளுக்கு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகத், இலங்கை சைவநெறிக் கழகத்தின் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் 20,000/= ரூபாய்கள் தமது சொந்தப்பணத்தினை கழகத்தின் சார்பில் நன்கொடையாக அளித்தார்கள். (கழகக்கூட்டம் ஒன்றில் பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்களுடன் கழகத்தின் பொதுச்செயலாளர்,தலைவர் உள்ளனர்.)

    Read More பேயாலோன் முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டிடத்திருப்பணிக்கு உதவுதல்Continue

  • இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017
    2017 | சமூகப்பணி

    இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017

    Byilankaisaivism 2020-05-082025-04-11

    2017ம் ஆண்டு மார்ச்சு மாதம் 18ம் நாள் இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் கடந்த ஆண்டுபோன்று, இவ்வாண்டும் அன்னதானப்பணியினை ஆலயத்தின் திருவிழாவின்போது இலங்கை சைவநெறிக் கழகம்(சைவசமூகத் திருப்பணிக் கழகம்) பொறுப்பெடுத்து செவ்வனே நிறைவேற்றியது. ஊர்மக்களுடன் நெருங்கிய பந்தம் இந்த அன்னதானத்தின் பலனாக உருவாகி, சிறப்பாகப் பேணப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.            

    Read More இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் ஆலயத்தில் ஆண்டுதோறுமான அன்னதானப்பணி -2017Continue

  • இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019
    2019 | சமூகப்பணி

    இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019

    Byilankaisaivism 2020-05-072020-05-09

    இரத்தினபுரி மாவட்டத்தில் கலத்துர தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆண்டுதோறுமான திருவிழாவில் அன்னதானப்பணியை வழமைபோன்று இவ்வாண்டும் (23-03-2019) இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தியது. பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன்,பிரதிச்செயலாளர் திரு.கோ.இளையராஜா , பொருளாளர் திரு.இரா.இராஜ்குமார் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இப்பணி ஆண்டுதோறும் சிறப்புற நடைபெற்று வருவதுடன், அங்குள்ள மக்களுடன் இலங்கை சைவநெறிக் கழகம் இரண்டறக் கலந்துறவாட இது அருமையான வாய்ப்பாக அமைந்துவருதல் சிறப்பம்சமாகும்.

    Read More இரத்தினபுரி கலத்துரத்தோட்ட அம்மன் ஆலயத்தில் அன்னதானப்பணி – 2019Continue

  • தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை
    2019 | இ/சைவநெறிக் கழகம்

    தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரை

    Byilankaisaivism 2020-03-252025-04-26

    இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரை அரங்கில் (2019-10-18), இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் (SLAS) அவர்கள் சமர்ப்பித்த தென்னிலங்கையில் அமையப்பெற்றுள்ள ஐந்தாவது ஈசுவரம் என்று நம்பப்படுகின்ற கோயில் சார்ந்த ஆய்வுக்கட்டுரை தெரிவாகி, பேராசிரியப்பெருமகனார் திரு. சி. பத்மநாதனார் தலைமையிற் நடைபெற்ற சபையோர் கூடிய அரங்கில் பல்லூடக அரங்க அளிக்கையாக அரங்கேற்றப்பட்டது.                              …

    Read More தென்னிலங்கை ஈசுவரம் -ஆய்வுக்கட்டுரைContinue

  • நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்
    2019 | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்

    Byilankaisaivism 2020-03-252025-04-26

    தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…

    Read More நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்Continue

  • சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை
    2020 | இ/சைவநெறிக் கழகம் | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரை

    Byilankaisaivism 2020-03-252025-05-20

    மொரட்டுவை-இரத்மலானை(சொய்சாப்புர) அறிவொளி அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவிற்கு (2020-02-02) முதன்மை விருந்தினராக இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் அழைக்கப்பட்டிருந்தார். இவ்விழாவில், அறநெறிக் கல்வியின் தேவையை நம்சமூகம் நன்கு உணர்ந்தில்லை என்னும் கருப்பொருளில் முதன்மை உரையை ஆற்றினார்.

    Read More சொய்சாப்புர பொங்கல் விழாவில் வைத்தியக் கலாநிதி. சிவஶ்ரீ.ஈசான பிரதாபன் தேசிகனார் உரைContinue

  • நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019
    2019 | சமயப்பணி

    நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019

    Byilankaisaivism 2020-03-252025-04-27

    2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி  இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கை சைவநெறிக் கழகம் முதலிய ஏனைய சமய அமைப்புக்களும் இணைந்து, கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசையினையும் விழாவினையும்  சிறப்பாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்புச் சொற்பொழிவாளராக பண்டிதர் மு.கந்தையாவின் சீடரான சிவத்திரு.தற்புருஷ அனுசானந்தன் தேசிகர் அவர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவரும்  ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் உபசெயலாளருமான சிவத்திரு. ஈசானதேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஓவியர் திரு. மு. பத்மவாசனார் அவர்களுக்கு,ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சைவநெறித் தொண்டு…

    Read More நாவலர் பெருமானின் குருபூசையும் நாவலர் விழாவும் 2019Continue

Page navigation

Previous PagePrevious 1 … 7 8 9 10 11 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search